செவ்வாய், 29 ஜூன், 2010

பழைய கதை - புதிய நீதி!

ஒரு மகனும், தந்தையும் நதியோரமாக நடந்து சென்றனர். அப்போது தந்தை , மகனே! நான் உன் கையைப் பிடித்துக்கொள்கிறேன், இல்லையென்றால் நதியில் விழுந்து விடுவாய் என்று கூறினாராம். அதற்கு மகன்,வேண்டாமப்பா நான் உங்கள் கையைப் பிடித்துக்கொள்கிறேன் என்றானாம். தந்தை சிரித்தபடியே கேட்டாராம் இரண்டுக்கும் என்ன
வித்தியாசம் என்று. அதற்கு மகன், இருக்கிறதப்பா, நான் உங்கள் கையைப் பிடித்திருக்கும்போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தம் மட்டுமே இருக்கும். நீங்கள் என் கையைப் பிடித்திருக்கும் போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தத்தைவிடக் குற்ற உணர்வு அதிகமாகும் என்றானாம்.

இதிலுள்ள உள்குத்து என்னன்னா, அநாவசியமா நீங்க என் கையப்பிடிக்கத் தேவையில்லை. அவசியம்னா நாங்க பாத்துக்கறோம்.

எல்லா கதைகளிலும் நாம் நீதியை எதிர்பார்த்துப் பழகியிருப்பதால்,

நீதி 1 : குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல கைடாக இருந்தால் போதும். வார்டனாக இரு[று]க்க வேண்டியதில்லை.

நீதி 2 : அவைங்களா வளரும்போது ஏதாவது ஏழரையானா [தப்பானா] வருத்தம் மட்டுமே இருக்கும். நம்ம வளர்த்து
ஏழரையானா நமக்குக் குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ளும் என்பதே:-)

கருத்துகள் இல்லை: