செவ்வாய், 6 ஜூலை, 2010

வலி உணரும் தருணங்கள்





புரிதல்களற்ற வாழ்வு புறக்கணித்த
முதுமை முகமொன்று
கொடுத்த வலி தீரும் முன்
நிற்கிறது கதியற்ற சலனமற்ற
குழந்தை முகம்
ஏதுமறியா பாவனையில்
கடக்கும் காலத்தின்
பின் நடக்கும் மனதில்
அறையும் கேள்விகளின்
வலி தாங்காது
ஓடிப் புதைகிறேன்
வலியற்ற தருணங்களுள்
பின்னும் தொடர்கிறது
காலம் வன்மத்துடன்...





சனி, 3 ஜூலை, 2010

பிழைகளுடன் கூடிய
பிழையற்றக் கவிதை
ஒன்று
தீர்ந்த வார்த்தைகளும்
தீரா மனதுமாய்
வாழ்வின் பக்கங்களை
நிரப்புகிறது.