செவ்வாய், 2 நவம்பர், 2010

தவிப்பு


காற்றினுள் துழாவுகின்றது என் கைகள்

பின்னிரவின் மௌனங்களின் ஊடாக

சலசலக்கிறது காற்று அமைதியைக் கிழித்தபடி

யாருமறியா இரவில் யாக்கையற்ற மனது

அலைகிறது வெப்பப் பெருவெளியில்

குருதியின் ஊடாக வழிந்தோடும்

மரணத்தின் இரைச்சல்கள் துரத்தும் போதும்

களைத்த கைகளின்

தேடல் முடிவற்று நீள்கிறது...

கருத்துகள் இல்லை: