வெள்ளி, 21 ஜனவரி, 2011

இரு வேறு உலகம்




நேற்றிரவு மகள் கை பிடித்து
என் கதை உலகிற்கு அழைத்து சென்றேன்.
அங்கு காகம் பாட்டியையும்
நரி காகத்தையும் ஏமாற்றியது
சிங்கம் பசுவை வஞ்சித்தது
புலி மானை காயப்படுத்தியது
ஒநாயும் கொக்கும்
பழி தீர்த்துக் கொண்டன.

பின் எனை அழைத்துசென்றாள்
அவளின் கதை உலகிற்கு
அங்கு காகமும் நரியும் கேக்கை
பகிர்ந்து கொண்டன!
எலியும், சிங்கமும்
ஹைட்& ஸீக் விளையாடின.
புலியும் மானும்
பார்ட்டி கொண்டாடின!
ஒநாயும்,கொக்கும்
ஒருவருக்கொருவர் உதவினர்
காயங்களற்ற அவ்வுலகில்
அவளை விட்டு
நான் மட்டும் வெளியேறினேன்!

1 கருத்து:

TAMILSUJATHA சொன்னது…

அடடா!