புதன், 29 டிசம்பர், 2010

பூக்களும் மெழுகுவர்த்திகளும்


வேட்டையாடப்பட்ட பூக்களை மறந்துவிடுங்கள்
வேட்டையாடப்படப் போகும் பூக்களுக்கான
மெழுகுவர்த்திகளுடன்
நாம் தயாராக இருப்போம்
நம் பூக்களுக்கான வேலிகளை
வேட்டைக்காரர்களிடமே விட்டுவிடுவோம்
வேட்டை முடிந்ததும்
தீர்ப்பும் அவர்களிடமே!
பூக்கள் உதிரும் தருணம்
அவர்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாம் ஏற்றிவைப்போம்
என் வீட்டுப் பூக்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாளை வேறு யாரேனும் ஏற்றக்கூடும்.
நம்மிடம் பூக்கள் ஏராளம்
மெழுகுவர்த்திகளை சேகரிக்கத் தொடங்குவோம்

(இக்கவிதை வன்முறையில் இறந்த நீதி கிடைக்காமல் போன அனைத்து குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்.)

கருத்துகள் இல்லை: