
புரிதல்களற்ற வாழ்வு புறக்கணித்த
முதுமை முகமொன்று
முதுமை முகமொன்று
கொடுத்த வலி தீரும் முன் 
நிற்கிறது கதியற்ற சலனமற்ற
குழந்தை முகம்
ஏதுமறியா பாவனையில்
கடக்கும் காலத்தின்
குழந்தை முகம்
ஏதுமறியா பாவனையில்
கடக்கும் காலத்தின்
பின் நடக்கும் மனதில் 
அறையும் கேள்விகளின் 
வலி தாங்காது 
ஓடிப் புதைகிறேன் 
வலியற்ற தருணங்களுள் 
பின்னும் தொடர்கிறது 
காலம் வன்மத்துடன்...